துணை ஜனாதிபதி தேர்தல்:வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

ஆகஸ்டு மாதம் 18ம் தேதியுடன் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதையடுத்து இப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 23ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாளாகும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது.

ஆகஸ்டு 10ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் அன்றே மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இத்தேர்தலில் மேல்சபை மற்றும் நாடாளுமன்ற எம்பிக்கள் மட்டுமே வாக்கு செலுத்த முடியும். நாடாளுமன்றத்தில் 543 எம்பிக்களும், மேல்சபையில் 233 எம்பிக்களும் உள்ளனர். மேலும் 14 நியமன எம்பிக்கள் உள்ளனர். எனவே மொத்தம் 790 பேர் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.

இப்பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் காந்தியின் பேரனான வங்காள ஆளுனர் கோபால் காந்தியும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முருசில் ஹசன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+