விம்பிள்டனில் பெடரர் புதிய சாதனை
விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து ஐந்து முறையாக வென்று, முன்னாள் வீரர் ஜோர்ன் போர்க் சாதனையை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முறியடித்துள்ளார்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ். நேற்று ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நடந்தது.
![]() |
இதில் சுவிஸ் வீரர் பெடரரும், ஸ்பெயின் வீரர் ரபேல் நாடலும் மோதினர். பெடரர் முதல் நிலை வீரர் ஆவார். நாடல் 2வது நிலை வீரர் ஆவார். இதனால் இருவரில் வெல்லப் போவது யார் என்பதில் ரசிகர்களிடையே பெரும் ஆவல் நிலவியது.
தொடக்கத்திலிருந்தே ஆட்டம் படு விறுவிறுப்பாக போனது. முதல் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டு செட்களை கைப்பற்றியதால் ஆட்டத்தால் விறுவிறுப்பு கூடியது.
இந்த நிலையில் 5வது செட்டை இருவரும் உத்வேகத்துடன் ஆடினர். ஆனால் பெடரரின் ஆவேச ஆட்டத்துக்கு முன்னால் நாடல் சமாளிக்க முடியாமல் திணறி இறுதியில் செட்டை இழந்து சாம்பியன் பட்டத்தையும் நாடலிடம் பறிகொடுத்தார்.
இந்த வெற்றி பெடரருக்கு 11வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும். அத்தோடுத தொடர்ச்சியாக விம்பிள்டனில் அவர் பெறும் 5வது சாம்பியன் பட்டமும் ஆகும்.
இதன் மூலம் சுவீடனின் ஜோன் போர்க் (1976-1980) இதற்கு முன்பு செய்த சாதனையை பெடரர் சமன் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பெடரர் தனது சாதனையை சமன் செய்ததை போர்க்கும் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்.













Click it and Unblock the Notifications