கர்நாடக தடுப்பணை: சுப்ரீம் கோர்ட்டை அணுகதமிழகத்திற்கு நடுவர் மன்றம் யோசனை
டெல்லி:காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு தமிழக அரசுக்கு காவிரி நடுவர் மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்சனையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி தனது இறுதி தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகம் அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தது. மேலும் காவிரி நடுவர் மன்றத்திடமும் மனு தாக்கல் செய்தன.
நேற்று இந்த மனு குறித்து விசாரிக்க காவிரி நடுவர் மன்றம், அதன் தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.பி.சிங் தலைமையில் கூடியது. அப்போது தமிழகத்தின் சார்பில் வழக்கறிஞர் பராசரன், கர்நாடகம் சார்பில் வழக்கறிஞர் அனில் திவாகர், கேரளா சார்பில் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆகியோர் ஆஜராயினர்.
காவிரி நீர் பாசன பகுதிகளில் கர்நாடக அரசு தடுப்பணைகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி நடுவர் மன்றத்திடம் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களைப் பரிசீலித்த நடுவர் மன்ற உறுப்பினர்கள், காவிரி நதிநீர் தொடர்பாக 3 மாநிலங்களும் தாக்கல் செய்துள்ள ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டிருப்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே 3 மாநில அரசுளும் தற்ேபாது தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது.
காவிரி பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பதால் இதில் நடுவர் மன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உறுப்பினர்கள் ெதரிவித்தனர்.
பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த கர்நாடக அரசின் தடுப்பணகள் குறித்த மனுவைப் பரிசீலித்த நடுவர் மன்ற உறுப்பினர்கள், தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு பெறலாம் என்று ெதரிவித்தனர்.












Click it and Unblock the Notifications