புறநகர் ரயில்கள் பழைய நேர அட்டவணைப்படி இயங்கும்-வேலு
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களின் நேர மாற்றத்திற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இனி பழைய அட்டவணைப்படியே ரயில்கள் இயங்கும் என ரயில்வே துறை இணையமைச்சர் வேலு அறிவித்துள்ளார்.
சென்னை புறநகர் மற்றும் அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் சென்று வர இந்த புறநகர் ரயில்களையே பெருமளவு நம்பியுள்ளனர்.
ஆனால், தெற்கு ரயில்வே இந்த புறநகர் ரயில்களின் நேர அட்டவணையில் கடந்த 1ம் தேதி சில மாற்றங்களை செய்தது. முன்னறிவிப்பு ஏதுமின்றி செய்யப்பட்ட இந்த நேர மாறுதலால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
இதையடுத்து ஆங்காங்கே பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து ரயில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் மீண்டும் பழைய நேர அட்டவணைப்படியே இயங்கும் என வேலு அறிவித்துள்ளார்.
குழப்படி செய்த ரயில்வே அதிகாரிகளையும் அவர் கடிந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications