கன்னியாகுமரி-கோஷ்டி மோதலில் வெடிகுண்டு வீச்சுமீனவர்கள் வீடுகளில் போலீஸ் சோதனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டத்தில் போலீஸார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் வீடுகளில் போலீஸார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அப்போது 2 கோஷ்டிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பங்கேற்க பொன்னந்தோப்பு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பு தாக்கியது. இதையடுத்து மீண்டும் 2 கோஷ்டிகளும் அரிவாள், கத்திகளுடன்மோதிக் கொண்டன.
தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
அப்போது திடீரென சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் மீனவர்கள் தரப்பில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று டிஎஸ்பி பிரசன்னா முன் விழுந்து வெடித்தது. இதில் பிரசன்னா காயமின்றி தப்பிவிட்டார்.
இந்த சம்பவத்தில் போலீஸார் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் ரப்பர் குண்டுகளாலும் துப்பாக்கி சூடு நடத்தி கலைய வைத்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முட்டம், பொன்னந்தோப்பு, மேலமூட்டம் உள்ளிட்ட பல இடங்களில் மீனவர்களின் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கி வைத்துள்ளனரா என போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.
இதனால் வீடுகளை விட்டு பெண்கள், குழந்தைகள் வெளியேறி வருகின்றனர்.இந்தக் கலவரம் தொடர்பாக 200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந்தப் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications