என் மீது தவறு இருந்தால்பதவி விலகத் தயார் - ராஜா
சென்னை:
பி.எஸ்.என்.எல். டெண்டர் விவகாரம் தொடர்பாக ஊழியர் சங்கங்கள் என் மீது கூறும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் யார் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஏ.ராஜா கூறியுள்ளார்.
![]() |
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தேவையற்றது, அவசியமற்றது. டெண்டர் விவகாரம் தொடர்பாக நான் தெளிவாக கூறி விட்டேன், விளக்கி விட்டேன். அவர்களது பணிப் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் இல்லை என்றும் கூறி விட்டேன்.
மொபைல் சேவைக்கான கருவிகளை வாங்குவது தொடர்பாக விடப்பட்ட டெண்டர் குறித்த சில சந்தேகங்களைத்தான் நான் வெளியிட்டிருந்தேன். ஆனால் இடது சாரிக் கட்சிகளுடன் தொடர்புடைய சில தொழிற்சங்கங்கள் இந்த விஷயத்தை தவறாக புரிந்து கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளன.
டெண்டரை ரத்து செய்ய நான் உத்தரவிடவில்லை. ஆனால் டெண்டர் தொகையை அதிகரித்து, பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெரும் நிதி இழப்புக்கு ஆளாவதைத் தடுக்குமாறுதான் நான் உத்தரவிட்டுள்ளேன்.
என் மீது பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால், நான் எனது அமைச்சர் பதவியை அடுத்த நிமிடமே ராஜினாமா செய்யத் தயார் என்றார் ராஜா.













Click it and Unblock the Notifications