மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் நியமனம்:மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் மீண்டும் அதே பணியிடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதை கண்டித்து மதுரையில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோரது முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications