டாக்டர் ஹனீப் மீண்டும் கைதுவிசாவும் ரத்து-விடுதலை ஆவதில் சிக்கல்
கான்பெரா:ஆஸ்திரேலிய நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் சில மணி நேரங்களிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் ஜாமீனில் விடுதலையாக முடியாத நிலை உருவாகியுள்ளது.
இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஜூலை 2ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹனீப். அவரை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்த ஆஸ்திரேலிய போலீஸார், ஹனீப்புக்கு எதிராக ஒரு ஆதாரமும் கிடைக்காமல் திணறினர்.
![]() |
இதையடுத்து அவர் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், அவர் மீது தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்து உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹனீப் சார்பில் ஜாமீன் கோரி பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், ஹனீப்புக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் வழக்கு முடியும் வரை வாரம் 3 முறை செளத் கோர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்ட சில மணி நேரங்ளிலேயே ஹனீப்பை மீண்டும் ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹனீப்பால் ஜாமீனில் வெளியே வர முடியாத நிலையை ஆஸ்திரேலிய போலீஸார் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் கூறுகையில், இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் ஹனீப்புக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
டாக்டர் ஹனீப், குணாதிசய சோதனையில் தோல்வி அடைந்து விட்டார். குடியேற்றச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அதை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவேதான் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹனீப் மீதான தற்போதைய வழக்கிற்கும், விசா ரத்து நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மீதான வழக்கு நியாயமான முறையில் நடைபெறும்.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கருதியே அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
விசா ரத்து செய்யப்பட்டு விட்டதால் சிட்னியில் உள்ள வில்லாவுட் குடியேற்றத் துறை காவல் மையத்தில் ஹனீப் அடைக்கப்படவுள்ளார்.
ஆஸ்திரேலிய போலீஸ் மற்றும் அரசின் இந்த குழப்பமான நடவடிக்கைகள் காரணமாக ஹனீப் தரப்பு பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?













Click it and Unblock the Notifications