ஐ.டி. நிறுவனங்கள் குறித்த நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சியைச் சேர்ந்த நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய விளக்க குறிப்பேட்டு நூலை வெளியிடவுள்ளது.
ஸ்ரீஆஞ்சநேயா அட்வர்டைசிங் மற்றும் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம், கடந்த 1994ம் ஆண்டு ஹனீதாஸ் டெலி கைட் என்ற நூலை வெளியிட்டது.
பல்வேறு நிறுவனங்கள் குறித்த தகவல்கள், அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்கள் இந்த நூலில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், தற்போது புதிதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் புதிய நூல் ஒன்றை இந்த நிறுவனம் வெளியிடவுள்ளது.
தி செளத் இந்தியா ஐ.டி. கைட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், தென்னிந்தியா முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஜூலை மாத இறுதியில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications