கபினி திறப்பு-முல்லை பெரியாறு நிரம்புகிறது:தமிழக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை:கேரளத்தில் பெய்து வரும் கன மழையால் குமுளி-தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.
அதன் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 134 அடியாக இருந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 136 அடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அணை எந்த நேரமும் திறக்கப்படும் என்பதால் தமிழகம் மற்றும் கேரளத்தில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்கள எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கபிணியில் வெள்ள அபாய எச்சரிக்கை:
அதே போல கர்நாடகத்தின் கபிணி அணையும் நிரம்பி விட்டது. இதனால் அணை திறக்கப்படுகிறது.
இதனால் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் அப்படியே மேட்டூரை நோக்கி பாயவுள்ளது. இதனால் தர்மபுரி, ஓகேனக்கல் ஆகிய பகுதிகளில் காவிரிக் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications