25ம் தேதி சென்னை வருகிறார் கலாம்:தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு
சென்னை:குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள் (ஜூலை 25ம் தேதி) சென்னைக்கு வருகிறார் அப்துல் கலாம். அவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்கள் திரண்டு வந்து தடபுடலான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் ஜனாதிபதி என்ற பெயருடனும், பெருமையுடனும், குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து வருகிற 24ம் தேதி ஓய்வு பெறுகிறார் அப்துல் கலாம். ஓய்வுக்குப் பின்னர் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக பணியாற்ற உள்ளார்.
![]() |
இதுதொடர்பான தனது விருப்பத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனிடம் நேற்று இரவு தொலைபேசி மூலம் கலாம் தெரிவித்து விட்டார்.
நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவியருக்கு கலாம் பாடம் எடுப்பார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் கலாம் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேறு விசேஷ ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை, தற்போதுள்ள விருந்தினர் மாளிகையே போதும் என கலாம் கூறி விட்டாராம்.
கலாம் 25ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும்போது அவரை பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 20 ஆயிரம் பேரும் திரண்டிருந்து வரவேற்பார்கள் என்று துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications