100 ஏக்கரில் நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை:திருநெல்வேலியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கோவையில் கோவை அண்ணா பல்கலைக்கழகம் எனவும், திருச்சியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் எனவும் புதிதாக இரு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
இதேபோல நெல்லையில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான முறையான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் (திருநெல்வேலி) என்ற புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
நெல்லை (12 பொறியியல் கல்லூரிகள்), தூத்துக்குடி (13), கன்னியாகுமரி (11), விருதுநகர் (6), சிவகங்கை (7), ராமநாதபுரம் (2) ஆகிய மாவட்டங்கள் இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51 கல்லூரிகள் நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வர உள்ளன.












Click it and Unblock the Notifications