மும்பையில் 7 மாடி கட்டிடம் இடிந்து 26 பேர் பலி
மும்பை:மும்பையில் 7 மாடி வர்த்தகக் கட்டிடம் இடிந்து விழந்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
போரிவிலி பகுதியில் உள்ள லட்சுமி சாயா என்ற 7 மாடி வணிக வளாகம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.இடிந்த கட்டிடத்தில் இருந்து இன்று காலை வரை 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இரவு முழுவதும் பெண்கள், குழந்தைகளின் அலறல் குரல்களும், அழுகையும் கேட்டுக் கொண்டே இருந்தன.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இடிந்த கட்டிடத்துக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
20 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டத்தில் வீடுகளும் கடைகளும் உள்ளன.
இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தபோது அக்கம்பக்கத்தில் இருந்த கட்டடங்களும் அதிர்ந்தன. இதனால் அதில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
கடும் மழையால் இந்தக் கட்டடம் வலுவிழந்தாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications