நெய்வேலி மின் நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
நெய்வேலி:நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தற்காலிக ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
போனஸ் தொகையை பிடித்தம் செய்வதைக் கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 13,000 தற்காலிக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த 3 நாட்களாக இந்த வேலை நிறுத்தம் நடந்து வந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து சென்னையில் நேற்று இரவு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ள தொழிலாளர்கள் தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications