தொழிற்கல்வி சட்டம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பைஎதிர்த்து அப்பீல்- பொன்முடி
சென்னை:தமிழக அரசின் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது. இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
முதல் நாள் உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில் 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இடம் கிடைத்த மாணவ, மாணவியருக்கு பொன்முடி அதற்குரிய உத்தரவுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான அவசரச் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்.
இதற்காக அரசுச் செயலாளர் டெல்லி சென்றுள்ளார். வக்கீல்களுடன் மனு தாக்கல் தொடர்பான ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும். எத்தனை தொடங்குவது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications