தண்டவாளத்தில் விரிசல்-கோவை எக்ஸ்பிரஸ்தப்பியது: நக்சல்களின் சதியா?
அரக்கோணம்:சென்னையை அடுத்த அரக்கோணத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை 7 மணியளவில் அரக்கோணம் அருகே அவந்திகான் பேட்டை என்னுமிடத்தில் ரயில்வே ஊழியர் தண்டவாளங்களை சரி பார்க்க ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சித்தேரிக்கும், அவந்திகான் பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் இருந்தது.
உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த அனைத்து ரயில்களையும் ஆங்காங்கே நிறுத்தினர்.
இதனால் கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை பெரும் விபத்தில் இருந்து தப்பின.
அரக்கோணத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து விரிசலை சரி செய்தனர். சரியான நேரத்தில் வந்த தகவலால் ரயில்கள் விபத்திலிருந்து தப்பியுள்ளன.
இந்தப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் மிக்கது. எனவே இது அவர்களது சதி வேலையா என்ற ரீதியில் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications