பிரதீபா வெற்றி உறுதி: ஐபிஎன் எக்ஸிட் போல்
டெல்லிநேற்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெல்வது உறுதி என சிஎன்என்-ஐபிஎன் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, மூன்றாவது அணியின் வாக்குகளை கணக்கில் எடுத்து பின்னர் வாக்களித்த எம்எல்ஏ, எம்பிக்களிடம் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
பிரதீபாவுக்கு 64 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
பிரதீபாவுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் தான் மிக அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
ஷெகாவத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரிலும், ஒரிஸ்ஸாவிலும் மிக அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 11 லட்சம் மதிப்புள்ள ஓட்டுகளில் 9.7 லட்சம் வாக்குகள் தான் பதிவாயின. இதில் பிரதீபாவுக்கு 64 சதவீத வாக்குகளும் ஷெகாவத்துக்கு 36 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
அதாவது பிரதீபாவுக்கு ஆதரவாக 6.4 லட்சம் மதிப்புள்ள வாக்குகளும் ஷெகாவத்துக்கு ஆதரவாக 3.5 லட்சம் மதிப்புள்ள வாக்குகளும் பதிவாகியுள்ளன என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications