For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவைத் தாண்டி 120.77 அடியாக உள்ளது.

கர்நாடகத்திலிருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.77 அடியாக இருந்தது. 120 அடி தான் நீரைத் தேக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு விநாடிக்கு 35 ஆயிரத்து 872 கன அடி நீர் வந்து ெகாண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரத்து 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் ெகாண்டிருக்கிறது.

பவானியில் கூடுதல் நீர் - காங். கோரிக்கை

இதற்கிடையே, பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி திட்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காங்கேயம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விடியல் சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பவானி சாகர் அணை நிரம்பி வழிகிறது. எனவே கீழ் பவானி திட்டக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் பெரும் வறட்சி நிலவுகிறது. எனவே கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சூரிய காந்தி பயிர்கள் வாடி வருகின்றன. எனவே உடனடியாக கீழ் பவானி திட்டக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X