கோதுமை இறக்குமதி-விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
சென்னை:வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்வதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது. இந்த கோதுமை அசுத்தமாக இருப்பதாகவும் விலையும் அதிகமாக இருப்பதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. மேலும் இதன் இறக்குமதியை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.செல்லமுத்து நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் இந்த இறக்குமதி கொள்கை இந்திய கோதுமை பயிரிடும் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளது. நமது நாட்டில் ஆண்டிற்கு 7.48 கோடி டன் கோதுமை விளைகிறது. கடந்த வருடத்தில் கோதுமை விளைச்சல் 6.93 கோடி டன்னாக இருந்தது.
இந் நிலையில் மத்திய அரசு தரமில்லாத கோதுமையை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
விவசாயிகள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இவர்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக சந்தையில் கொண்டுபோய் விற்கவும் முடியவில்லை. இதில் இடைத்தரகர்களின் அட்டகாசம் அதிகம்.
இவர்களை ஒழித்து கட்டி, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து மக்களிடம் கொண்டு போய் விளைபொருட்களை சேர்க்கும் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
அதுமட்டுமல்லாது, விவசாயிகளுக்கு சரியான விலையையும் அவர்கள் கொடுக்கிறார்கள். இத்தனை வருடமாக இடைத் தரகர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிலிருந்து மீட்க ரிலையன்ஸ் போன்ற கடைகள் வர நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி கடன் கொடுக்க உத்தரவிட்டுள்ளதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளுக்கு அடமான கடன்கள் தருவது குறித்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார் செல்லமுத்து.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications