கணவனை எரித்த பலான மனைவி!
திருமயம்:தனது கள்ளக் காதலை தட்டிக் கேட்ட கணவரை தீ வைத்து எரித்துக் கொன்றார் மனைவி.
சிவகங்கை திருப்பத்தூரை அடுத்துள்ளது திருமயம். இங்குள்ள முந்திரிக் காட்டில் கடந்த மார்ச் மாதம் பாதி உடல் எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் இறந்து கிடந்தவரின் மனைவியை போலீசார் இப்பேது கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்த விவரம்
திருமயத்தைச் சேர்ந்த முத்துக்குமார்-பழனியம்மாள் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கணவனுடன் வாழ்வதற்கு பிடிக்காத பழனியம்மாள், கணவனை விட்டுப் பிரிந்தார். இந் நிலையில் பழனியம்மாளுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இந்த விஷயம் தெரிந்த முத்துக்குமார் தன் மனைவி பழனியம்மாளை கண்டித்துள்ளார். இதையடுத்து கணவரை தீர்த்துக் கட்ட பழனியம்மாள் முடிவு செய்தார்.
கடந்த மார்ச் மாதம், கணவரை முந்திரிக் காட்டிற்கு அழைத்துச் சென்றார் பழனியம்மா. அங்க அவரது தனது கள்ளக் காதலர்கள் காத்திருந்தனர்.
அவர்களது உதவியோடு முத்துக்குமாரை முந்திரிக் காட்டில் வைத்து கத்தியால் குத்தி கொன்றுள்ளார் பழனியம்மாள்.
பின்னர் அவர்கள் பிணத்தை எரித்துவிட்டு வந்துள்ளனர்.
இந்தத் கொலைக்கு உடந்தையாக இருந்த பழனியம்மாளின் கள்ளக் காதலர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications