அடுத்த வாரம் மத்திய அமைச்சராகிறார் கனிமொழி?
டெல்லி:முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று திமுக ராஜ்யசபா எம்.பியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் கனிமொழி மத்திய அமைச்சராகக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![]() |
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகியோர் இன்று ராஜ்யசபா எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான் கான் இவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இடது சாரித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![]() |
இந் நிலையில் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.
திமுக சார்பில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து வந்த தயாநிதி மாறன், அழகிரி விவகாரத்தால் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது.
இருந்தாலும் அவர் தொடர்ந்து திமுக எம்.பியாகவே நீடித்து வருகிறார்.
தயாநிதி மாறன் வசம் இருந்த தொலைத் தொடர்புத் துறை ஏ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் துறை பிரதமர் வசம் உள்ளது. அது வேறு யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்படவுள்ளது.
ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள ரகுமான்கான் மத்திய அமைச்சராகிறார். இதுதவிர முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவை கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் தோற்கடித்த காங்கிரஸ் எம்.பி. தேஜஸ்வினிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
அப்போது கனிமொழியும் அமைச்சராக்கப்படுவார் என்று தெரிகிறது.
ராசா வசம் உள்ள தொலைத் தொடர்புத்துறை அல்லது பிரதமர் வசம் உள்ள சுற்றுச்சூழல் துறை அவருக்கு வழங்கப்படலாம்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளது.














Click it and Unblock the Notifications