விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில்கொண்டு செல்லப்பட்டவர் வேன் மோதி பலி!
கரூர்:கரூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டவர், அந்த ஆம்புலன்ஸ் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோவில்பாளைய் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம்.
இவர் கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயக்கமானார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
காயமடைந்த சண்முகத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆண்டாங்கோவில் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது எதிரே வந்த மாருதி வேன் மீது ஆம்புலன்ஸ் மோதியது.
இந்த விபத்தில் ஏற்கனவே காயமடைந்திருந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதில் கொடுமை என்னவென்றால் சண்முகத்தை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸின் டிரைவர், குடிபோதையில் இருந்ததுதான். அந்த டிரைவரும் விபத்தில் காயமடைந்தார்.