மர்மமாக நின்ற காரால் கோவையில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் மர்மமான முறையில் நின்று கொண்டிருந்த காரால் பதட்டம் ஏற்பட்டது.
![]() |
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில், ஒரு கார் நேற்று காலை முதல் மர்மமான முறையில் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பரபரப்படைந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்தக் காரை மீட்டு அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
மர்மக் கார் நின்ற இடத்தில்தான், கோவை குண்டுவெடிப்பின்போது பாஜக தலைவர் அத்வானி பேசுவற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அவர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இங்கு குண்டுவெடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications