டாடா ஆலை-தடையை மீறி பேரணி:காரை வழிமறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை:டாடா தொழிற்சாலையை எதிர்த்து போலீஸ் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் டாடா நிறுவனம் அமைக்கவிருக்கும் டைட்டானியம் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி தலைமையில் குட்டம் என்ற கிராமத்திலிருந்து ஊர்வலமாக சென்று திசையான்விளை இணை-பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Krishnaswammy

ஆனால, இந்த ஊர்வலகத்துக்கு போலீஸார் அனுமதி தரவில்லை.

ஆனால், போலீஸ் தடையை மீறி பேரணி நடத்த டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து காரில் திசையன்விளைக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் 7 வாகனங்களில் தொண்டர்களும் சென்றனர்.

ஆனால், வி.எம் சத்திரம் அருகே சென்றபோது துணை போலீஸ் கமிஷ்னர் தினகரன் தலைமையிலான போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 37 பேரை கைது செய்தனர்.

மேலும் திசையன்விளையில் 75 புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணசாமி கைது காரணமாக தென் மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+