துபாயில் விபச்சாரம்-3 உஸ்பெக் பெண்களுக்குசிறை: நாடு கடத்தல்
துபாய்:விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களுக்கு துபாய் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனை முடிந்ததும் அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டது.
ஒய்.எச், இசட்.எச், என்.டி என அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. முழு விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஜனவரி 14ம் தேதி மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஒய்.எச். என்ற பெண், மற்ற இருவரையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். அல் ரபா போலீஸார் மூன்று பேரையும் கைது செய்து துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை 6 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி அகமது ஹசன் அல் முட்டவா, சிறைத் தண்டனைக்குப் பின்னர் அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டார். தண்டனைக்குள்ளான மூன்று பேரும் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்னொரு வழக்கில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏ.இ. என்பவரும், அதே நாட்டைச் சேர்ந்த எச்.ஏ என்பவரும் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஏ.இயை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அவரது நண்பருக்கு 1,000 தினார்கள் அபராதம் விதித்து நாட்டை விட்டு வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இருவரும் கடந்த மார்ச் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். துபாய் விமான நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட வேலியம் பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
எச்.ஏ வைத்திருந்த பையில் இந்த வேலியம் பொட்டலங்கள் இருந்தன. ஆனால் அவர் வேலியம் பொட்டலங்களை வைத்திருந்தது தனக்குத் தெரியாது என்று ஏ.இ. கூறியதை நீதிபதி ஏற்றுக் கொண்டு அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
எச்.ஏ ஒரு பெண் ஆவார். விடுமுறைக்காக ஏ.இ. பிலிப்பைன்ஸ் சென்றபோது தனது கொடுக்கும் பையை வாங்கி வருமாறு அவர் ஏ.இ.யிடம் கூறியிருந்தார்.
மேலும் இந்த வேலியத்தை மருந்தாகத்தான் தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கோர்ட்டில் தெரிவித்தார். இதுதொடர்பான மருத்துவரின் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications