தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும்கர்நாடகம்-தடுக்காத கருணாநிதி: ஜெ. தாக்கு
சென்னை:தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசுக்கு தொலைநோக்கு சிந்தனையே கிடையாது. அதனால் தான் தமிழகம் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது.
தற்போது கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே முகளூர் என்ற இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டும் முதற்கட்ட பணியாக கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் முகளூரில் ஆய்வு செய்து அவ்விடத்தில் அடையாள குறியீடுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
இத் திட்டத்துக்காக முதற் கட்டமாக கர்நாடக அரசு ரூ.25 கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த ஆய்வுப் பணியை முகளூர் பகுதி பொது மக்கள் பார்த்துள்ளனர்.
கர்நாடகத்தின் நந்தி ஹில்ஸ் மலையில் உற்பத்தியாகி சிக்கபலாபுரம் வழியாக தமிழ்நாட்டின் எல்லையைத் தொட்டு தென் பெண்ணை ஆற்றின் வழியாக ஓடும் இந்த ஆறு கோடியாளம் தடுப்பு அணை வழியாக ஓசூர் கெலவரபள்ளி அணையை வந்தடைகிறது.
இந்த அணையின் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைகள் நிறைவடைவதோடு, விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு பயன்பட்டு வந்த இந்த அணைக்கு நீர் வரும் பாதையில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதையெல்லாம் கவனிக்காமல், தேவையில்லாத அறிக்கைகளை விடுவதிலும், தரமற்ற கேள்வி-பதில் எழுவதிலும் நேரத்தை செலவிடுகிறார். இதுக்கே அவருக்கு நேரம் போதவில்லை.
திமுக அரசின் தெளிவான தொலை நோக்கு பார்வை இல்லாத காரணத்தினால்தான், காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருவது ஆகிய பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் கருணாநிதி.
இதில், இந்த பட்டியலில் தென் பெண்ணை ஆற்றில் அணை கட்டுவதும் சேர்ந்துள்ளது.
எப்படிப்பட்டவரும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. வானம் பொய்த்தால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என்ற வள்ளுவரின் புகழ்மிக்க பொருளுக்கு ஏற்ப நீரின் அவசியம் வாழ்க்கையில் முக்கியமானதாக உள்ளது.
நான் காவிரி தண்ணீரை குடித்து வளர்ந்தேன் என்று சொல்லும் கருணாநிதி அந்த தண்ணீரின் அருமையை உணராத காரணத்தினால் தான் தண்ணீரின் வளத்தை தொலைத்துவிட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications