கிளாஸ்கோ தாக்குதல்-கபீல் அகமது மரணம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப் தாக்குதல் நடத்தி பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமது சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
![]() |
ஜூன் 30ம் தேதி கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஒரு ஜீப் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இதை ஓட்டி வந்த கபீல் அகமது பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து கபீல் லண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
![]() |
விசாரணையில் கபீல் அகமது பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் என்பது தெரிய வந்தது. பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கபீல் அகமது இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தொடர்ந்து கோமா நிலையில் தான் இருந்து வந்தார்.
![]() |
இவர் நடத்திய தீவிரவாத தாக்குதலில் உடலில் தீப் பிடித்து 90 சதவீத தீக்காயம் அடைந்தார்.
கபீல் அகமதுவின் சகோதரர் சபீல் அகமது ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் உறவினரான டாக்டர் முகம்மது ஹனீப் சமீபத்தில்தான் ஆஸ்திரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.















Click it and Unblock the Notifications