ஏடிஎம் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு: கனரா வங்கி அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன் முறையாக கனரா வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, அவர்களின் டிக்கெட் தொகையை வங்கி கணக்கிலிருந்து ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளும்.

மேலும் இந்த ஏடிஎம் மெஷின் மூலம் செல்போன் ரீசார்ஜ் செய்து கொள்ளவும், விமான டிக்கெட் பதிவு செய்யவும் இயலும்.

முதல் கட்டமாக நாடு முழுவதும் 225 ஏடிஎம்களில் இந்த வசதியை அமல்படுத்த ரயில்வே துறையுடன் கனரா வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 55 கனரா வங்கி ஏடிஎம் மெஷின்களில் இந்த வசதி அறிமுகமாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+