சுய நலத்திற்காக கட்சியா?: சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:எனது சுய நலத்திற்காக கட்சி தொடங்கவில்லை. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர பாடுபடுவோம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

Sarathkumar

நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் பிறந்த தினவிழா, நாடார் சங்க 19-வது ஆண்டு விழா, காமராஜர் அரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சரத்குமார் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு பிறகு புதிய கட்சியை தொடங்க உள்ளோம். அப்போது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிப்போம்.


நல்ல எண்ணத்தோடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருகிணைத்து சமத்துவ கட்சியாக எங்கள் கட்சி செயல்படும். அதற்காக நாம் அனைவரும் ஒருகிணைந்து பாடுபட வேண்டும்.

வருங்கால சமுதாயமும் இளைஞர்களும் எழுச்சியுடன் செயல்பட தொடர்ந்து பாடுபடுவேன். உங்களை மாதத்தோறும் சந்திக்க உள்ளேன். 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடந்தது.


காமராஜர் எப்படி ஆட்சி செய்தார். அவரது திட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். காமராஜர் தனது ஆட்சி காலத்தில் கல்வி வளர்ச்சிக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டார். அத்தகைய சிறப்பான ஒரு ஆட்சியை அமைக்க நாம் பாடுபட வேண்டும்.

சினிமாக்களில் நடித்து உங்களது ஆதரவால் உயர்ந்திருக்கிறேன். எந்த சுய நலத்திற்காகவும் கட்சி தொடங்கவில்லை. தன்னலமற்ற, சுயநலமற்ற வகையில் மக்களுக்கு செயல்படவே கட்சி தொடங்குகிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+