பூட்டிய வீட்டில் கொள்ளை-பெண் சாமியாரிடம் விசாரணை
திருப்பூர்:திருப்பூரில் பூட்டிய வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பெண் சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் கருமானம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சுப்புராம் (23)- சுப்புலெட்சுமி(19) தம்பதி. சுப்புராம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுடைய வீட்டிற்கு அருகில் குடியிருப்பவர் சுதா (35). இவர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறி சொல்வாராம்.
ஒரு மாதத்திற்கு முன்பு சுப்புலெட்சுமியிடம் சுதா, உனக்கு நேரம் சரியில்லை, நீ இந்த வீட்டில் இருக்காதே. வீட்டில் இருந்து எதையும் எடுக்காமல் 1 மாதத்திற்கு எங்கேயாவது வேறிடத்தில் இருப்பது தான் நல்லது என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய சுப்புலட்சுமியும் சுப்புராமும், வீட்டை பூட்டி உறவினரிடம் சாவியை கொடுத்துவிட்டு சுப்புலட்சுமியின் தாய் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந் நிலையில் இரு நாட்களுக்கு முன், பெண் சாமியார் சொன்னபடி 1 மாதம் முடிந்து விட்டதால், உறவினர் வீட்டுக்கு போன் செய்து வீட்டில் இருக்கும் நகையை உங்கள் வீட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
உறவினரரும் சுப்புலெட்சுமி சொல்லியபடி வீட்டுக்குப் போய் பார்த்துள்ளார். ஆனால், அங்கு நகைகள் இல்லை. இது குறித்து சுப்புலட்சுமி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
பெண் சாமியார் சுதா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications