ஜெயா டிவி பார்ட்னர் வைகுண்டத்தின் தம்பி கைதுகாவல் நிலையத்தில் அதிமுக வக்கீல்கள் முற்றுகை
நெல்லை:ஜெயா டிவியின் பார்ட்னரும், கார்நெட் கனிமத்தை ஏற்றுமதி செய்து வருபவருமான வைகுண்டராஜனின் தம்பி ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குலசேகரபட்டிணத்தில் ஜெகதீஷ் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு வைத்து அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழக போலீசால் தேடப்பட்டு வரும் வைகுண்டராஜன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இந்தத் தனிப்படையின் செயல்பாட்டை வைகுண்டதுக்கு அவ்வப்போது அப்டேட் செய்து வருவதால் அவர் தொடர்ந்து தப்பியோடிக் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் அவரது தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வைகுண்டராஜன் கைது செய்யப்பட்டதையடுத்து 40க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர் கூடங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications