கரூரில் தலையில் தேங்காய் உடைக்கும் விழா:சிறுவர்கள் தலைக்கு தடா!

Subscribe to Oneindia Tamil

கரூர்:கருர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Coconut broken of head in Karur temple

கருர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இது கிருஷ்ணதேவராயர் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு கருர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் பெங்களூர், மைசூர், ஹைதராபாத் போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.

Coconut broken of head in Karur temple

ஆண்டுதோறும் ஆடி 1ம் தேதி முதல் விரதம் இருப்பார்கள் பக்தர்கள். 19ம் தேதியான இன்று தங்களது தலையை மொட்டையடித்து நேர்த்திக் கடனை முடித்து தலையில் தேங்காய் உடைத்து விரத்தை முடித்துக் கொள்வர். இதில் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்படுவதுண்டு.

Coconut broken of head in Karur temple

இந்த ஆண்டும் தலையில் தேங்காய் உடைக்கும் விழாவுக்காக பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்தில் குவிந்துள்ளனர். விழாவில் 5 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்களுக்கு கோவில் பூசாரி தலையில் தேங்காய் உடைப்பார்.

ஆனால் சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் மூளை பாதிக்கும் என சிலர் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து குளித்தலை ஆர்.டி.ஓ. பிச்சையம்மாள் கோவில் நிர்வாகத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைக்க மாட்டோம் என கோவில் நிர்வாகிகள் உறுதியளித்தனர். இருந்தும் சிறுவர் தலையில் தேங்காய் உடைப்பக் கண்காணிக்க போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+