மெரீனாவில் மூழ்கி கேரள நிருபர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:கேரளாவைச் சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர் சென்னை மெரீனா கடலில் மூழ்கி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷியாம் பரக்கல் (28). இவர் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார். தற்போது தி பயனியர் நாளிதழின் கொச்சி பதிப்பில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.
தனது சகாக்கள் சிலருடன் சென்னைக்கு வந்திருந்தார் ஷியாம். புதன்கிழமை மாலை இவரும், நண்பர்களும் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடலில் குளித்துள்ளனர். அப்போது உருவான பெரிய அலையில் ஷியாம் சிக்கிக் கொண்டார்.
கடலில் இழுத்துச் செல்லப்பட்ட ஷியாம் மூழ்கி இறந்தார்.
ஷியாமின் உடல் வெள்ளிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications