டாடா நிறுவனம்: பொன்முடி தலைமையில்கருத்து கேட்புக் குழு- கருணாநிதி அறிவிப்பு
சென்னை:தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்தை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என கடந்த 30ம் தேதி முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்பதற்காக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், அமைச்சர் கீதா ஜீவன், தொழில்துறை, வருவாய்த்துறை மற்றும் கணிமத்துறை செயலாளர்கள் அடங்கிய ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு விரைவில் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும், மக்களிடம் கருத்துக்களைக் கேட்டு முதல்வரிடம் தெரிவிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications