திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள்விரும்பவில்லை - கூறுகிறார் இல.கணேசன்
சென்னை: திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள் விரும்பவில்லை. வருங்காலத்தில் தேமுதிகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக அல்லாத கட்சிகளின் ஆட்சியை விரும்புகிறார்கள். அதனால் தான் நாங்கள் கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டோம்.
![]() |
சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து அப்போது எடுத்த முடிவை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இதனால்தான் நாங்கள் தனித்துப் போட்டியிட நேர்ந்தது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு, பாஜகதான் மாற்றுக் கட்சி என்பதை நிரூபிக்க தவறிவிட்டோம். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். திமுக, அதிமுகவுக்கு மாற்றான கட்சி தேமுதிகதான் என்பதை அவர் நிரூபித்து விட்டார்.
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே தான் கடும் போட்டி ஏற்படும். 3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையை ஜெயலலிதா ஏற்படுத்தி விட்டார்.
எனவே மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸ் தான் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும்.
எனவே, அகில இந்திய அளவில் பலம் படைத்த பாஜகவும், தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்கட்சியாக வளர்ந்துள்ள தேமுதிகவும் இணைந்து செயல்பட வேண்டும்.
பாஜக, தேமுதிக இணைப்பு தமிழகத்தில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால்தான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்றாக ஒரு பலமான அணியாக உருவெடுக்கும்.
தேமுதிகவின் வளர்ச்சி பாஜகவை விட, ஆளும் திமுக அரசை எதிர்க்கின்ற மற்ற கட்சிகளைத்தான் வெகுவாக பாதித்துள்ளது என்றார் கணேசன்.













Click it and Unblock the Notifications