திருமா. போராட்டம் எதிரொலி - கோவிலுக்குப் பூட்டு!
சேலம்:தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்ததால், சேலம் மாவட்டம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டனர்.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளதாகும்.
ஆனால் கோவிலுக்குள் தலித் சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சமீப காலமாக அவர்களுக்கும் வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது.
![]() |
இந்த நிலையில், தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் திருமாவளவன் அரசுக்க்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை வன்னியர் சமூகத்தினர் அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தனர்.
இதைத் தொடர்ந்து தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தப் போவதாக (நாளை) திருமாவளவன் அறிவித்தார். இதனால் கந்தம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் கோவிலுக்குப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
திருமா. போராட்டம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே தான் அறிவித்த போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் கவுந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் சென்று வழிபட முடியாத நிலை நிலவுகிறது.
கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வழிபாட்டுரிமை அறப்போர் எனும் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திங்கள்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியில், நடந்த பதற்றத்தையடுத்து 3ம் தேதி கலெக்டர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகத் தீர்வு ஏற்படும் வரையில், கோவிலைப் பூட்டி பூட்டு முத்திரை வைக்க முடிவெடுத்து கோவில் மூடப்பட்டுள்ளது.
எனவே கோவில் நுழைவுப் போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த கட்ட சூழல்களைப் பொறுத்து முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications