தமிழகத்தில் 8ம் தேதி ஆட்டோ ஸ்டிரைக்
சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 8ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் தர்மலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆட்டோ நல வாரியத்தில் உறுப்பினர்களாக சோர்ந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காஸ் நிரப்பும் நிலையங்களை விஸ்தரிக்க வேண்டும்.
ஆட்டோக்களில் காஸ் கருவிகளைப் பொருத்துவதற்கு மத்திய அரசு ரூ. 5000 மானியம் வழங்க வேண்டும்.
ஆட்டோ பெர்மிட் வழங்குவது தொடர்பாக மாநில அரசு முறையான கொள்கையை வகுக்க வேண்டும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அட்டகாசம் செய்து வரும் புரோக்கர்களை ஒழிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 8ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications