ஈராக்: லாரி குண்டு வெடித்து 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:ஈராக்கில் லாரி நிறைய குண்டுடன் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, வீடுகளின் மீது மோதியதில் 25 பேர் உடல் சிதறி பலியாயினர். 10 வீடுகள் தரைமட்டமாகின.
ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சதா மாவட்டத்தில் உள்ள தல் அபார் என்ற இடத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.
லாரி நிறைய குண்டுகளுடன் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி வீடுகளின் மீது லாரியுடன் மோதினார். இதில் குண்டுகள் வெடித்ததில் 25 பேர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தலைமறைவாகின.
30க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications