எஸ்.ஐயுடன் கள்ளத் தொடர்பு-பெண் டிஎஸ்பி தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:சப் இன்ஸ்பெக்டருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் டிஎஸ்பி தலைமறைவாகியுள்ளார்.

மதுரை கீரைத்துறை காவல் நிைலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் மோகன்.

இவர் விழுப்புரத்தில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றியபோது தனக்கு மேலதிகரியான பெண் டி.எஸ்.பி. உமையாளுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

Mohan SI

இருவரும் காவல் நிலையத்திலேயே உல்லாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மோகன் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே உமையாளும் விருதுநகருக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு வந்தார்.

அருகருகே உள்ள ஊர்களுக்கு வந்த இருவருக்கும் இடையே மீண்டும் கள்ளத் காதல் தொடர்ந்தது.

இந் நிலையில் மோகனின் மனைவி பரமேஸ்வரி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், மோகன் விழுப்புரத்தில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய பெண் டி.எஸ்.பி. உமையாளுடன் மோகனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந் நிலையில் அவர் நேற்று வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் உமையாளையும் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உமையாள் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், அவரது மனு தள்ளுபடியாகிவிட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+