For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாவூத் இப்ராகிம் கைது?-அமெரிக்க நெருக்கடியால்முஷாரப் அதிரடி: ஷகீல், மேமனும் பிடிபட்டனர்

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமியும், ராஜசேகரனும் விடுதலை செய்யப்பட்டனர்.

இஸ்லாமாபாத்:மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானின் உளவுப் பிரிவு கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் நெருக்கடியைத் தொடர்ந்து தாவூதை அதிபர் முஷாரப் கைது செய்ய உத்தரவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து துபாய்க்குத் தப்பிய தாவூத் அங்கிருந்து பாகிஸ்தான் உளவுப் பிரிவின் உதவியோடு கராச்சியில் குடியேறினார்.

Dawood Ibrahim

அங்கு உயர் ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பிலேயே தாவூதும் அதிகபட்ச ராணுவ பாதுகாப்போடு தங்கியிருந்தார்.

ஆனால், தாவூத் பாகிஸ்தானில் இல்லை என அந் நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

இந் நிலையில் தாவூதை அமெரிக்காவும் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது. அதிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி உருவானது.

Tiger Memonஅல்-கொய்தாவுக்கு தாவூத் நிதி உதவி செய்து வருவதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா அவரை கைது செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு முஷாரபுக்கு நெருக்கடி தர ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் கராச்சியில் இருந்து தாவூத் இப்ராகிமை வெளியேற்றிய பாகிஸ்தான் அரசு, அவரையும், சோட்டா சகீல் மற்றும் மும்பை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் ஆகியோரை ஆப்கான் எல்லைப் பகுதியில் குடியேற்றியது.

Chotashakeelஆனாலும் அவர்களது இருப்பிடத்தை அறிந்த அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானை நெருக்கியதால், அவர்களை கைது செய்ய முஷாரப் உத்தரவிட்டார்.

இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு குவெட்டா நகரின் வெளியே ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவர் பாகிஸ்தானிலேயே இல்லை என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

முன்னதாக தாவூதை கராச்சியில் வைத்து அவரது எதிர் கோஷ்டியினர் தாக்கியதில் அவருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இதையும் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

தாவூத் இங்கேயே இல்லாத நிலையில் எப்படி அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளனர் பாகிஸ்தான் அதிகாரிகள்.

ஆனால், இப்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவில் கட்டுப்பாட்டில் தான் தாவூதும் மற்ற இருவரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X