சஞ்சய் தத்துக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் சார்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிபு வழக்கில் மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர்.
![]() |
ஏகே-56 ரக துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தான் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
அவருக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இப்போது எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தத்துக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை அவரது தங்கையும் காங்கிரஸ் எம்பியுமான ப்ரியா தத் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications