மதுரை சிறையில் கைதி திடீர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை சிறையில் கைதி திடீரென மரணமடைந்தார்.
மதுரை மாவட்டம் வாலாந்தூர் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் புலிப்பாண்டி தேவர். இவர் வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் புலிப் பாண்டிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சிகிச்சைக்காக புலிப்பாண்டியை மதுரை அரசு மருத்தவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போனார்.












Click it and Unblock the Notifications