நாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா?- ஜெ. கேள்வி
சென்னை:அணு சக்தி ஒப்பந்தம் மூலம் அமரிக்காவுக்கு, மத்திய அரசு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் கண்டித்து இன்று ஒரு அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா. அதில் கூறியிருப்பதாவது:
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான சம அந்தஸ்து கொண்ட ஒப்பந்தம் போலவே இல்லை. மாறாக, எஜமானர், அடிமை சாசனம் போலவே இருக்கிறது. நமது நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய எம்.பிக்கள், விஞ்ஞானிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணியான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, வெளிநாட்டு எஜமானர்களிடம் நமது நாட்டை அடகு வைத்து விட்டது. அவர்கள் கூறியபடிதான் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எம்.பிக்கள், விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும். அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்.
அணு சக்தித் துறையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடை போட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் அணு ஆய்வுத் திறமை பாதிக்கப்படும், தடைபட்டுப் போகும். அவர்களின் ஆய்வு மனநிலை பின்னடைவை சந்திக்கும்.
நமது நாட்டு அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா ஏன் பார்வையிட வேண்டும்?. அவர்கள் நாட்டில் உள்ள அணு சக்தி நிலையங்களைப் பார்வையிட நம்மை அமெரிக்கா அனுமதிக்குமா?
இனிமேல், பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்போது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை அரசு பெற வேண்டும். அதற்கேற்ப நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே முடியாது என்று கூறுகிறது மத்திய அரசு.
ஈராக் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளதாக கூறி அந்த நாட்டை சிதறடித்து விட்டது அமெரிக்கா. வட கொரியாவையும் குறி வைத்து தற்போது காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஈரான் மீதும் படையெடுக்க காத்துக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தியா ஏன் அமெரிக்காவுடன் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். நாமாக வலியச் சென்று ஏன் அவர்களின் வலையில் விழ வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications