நாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா?- ஜெ. கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:அணு சக்தி ஒப்பந்தம் மூலம் அமரிக்காவுக்கு, மத்திய அரசு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் கண்டித்து இன்று ஒரு அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா. அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான சம அந்தஸ்து கொண்ட ஒப்பந்தம் போலவே இல்லை. மாறாக, எஜமானர், அடிமை சாசனம் போலவே இருக்கிறது. நமது நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய எம்.பிக்கள், விஞ்ஞானிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணியான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, வெளிநாட்டு எஜமானர்களிடம் நமது நாட்டை அடகு வைத்து விட்டது. அவர்கள் கூறியபடிதான் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எம்.பிக்கள், விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும். அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்.

அணு சக்தித் துறையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடை போட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் அணு ஆய்வுத் திறமை பாதிக்கப்படும், தடைபட்டுப் போகும். அவர்களின் ஆய்வு மனநிலை பின்னடைவை சந்திக்கும்.

நமது நாட்டு அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா ஏன் பார்வையிட வேண்டும்?. அவர்கள் நாட்டில் உள்ள அணு சக்தி நிலையங்களைப் பார்வையிட நம்மை அமெரிக்கா அனுமதிக்குமா?

இனிமேல், பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்போது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை அரசு பெற வேண்டும். அதற்கேற்ப நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே முடியாது என்று கூறுகிறது மத்திய அரசு.

ஈராக் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளதாக கூறி அந்த நாட்டை சிதறடித்து விட்டது அமெரிக்கா. வட கொரியாவையும் குறி வைத்து தற்போது காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஈரான் மீதும் படையெடுக்க காத்துக் கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியா ஏன் அமெரிக்காவுடன் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். நாமாக வலியச் சென்று ஏன் அவர்களின் வலையில் விழ வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+