போராட்டத்தில் குதிக்கும் பாமக போக்குவரத்து ஊழியர் சங்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாமகவின் தமிழ்நாடு தொழிலாளர் கூட்டமைப்பு (போக்குவரத்து ஊழியர் சங்கம்) அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் தலைவரும் எம்பியுமான ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்.
மேலும் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்ளுக்கு இணையான சலுகைகள் தர வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் பென்ஷன் தரப்பட வேண்டும். பணியில் இருக்கும்போது காலமாகும் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications