நகைக் கடையில் ரூ. 20 லட்சம் அபேஸ்:கோவிலில் துளை போட்டு கொள்ளை!
புதுக்கோட்டை&அரக்கோணம்:புதுக்கோட்டை அருகே நகைக் கடையை உடைத்துக் கொண்டு புகுந்த திருடர்கள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர்.
நேற்றிரவு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இச் சம்பவம் நடந்தது.
இன்று காலை நகைக் கடை உரிமையாளர் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
கடையில் வைத்திருந்த இரண்டரை கிலோ தங்க நகைகளை காணவில்லை. அதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
கோவிலில் கொள்ளை
அதே போல வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கோவில் சுவரில் பெரிய துளை போட்டு உள்ளே நுழைந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அரக்கோணம் அருகே வளர்புரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு படவேட்டு அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் நேற்று இரவு சிலர் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் கோவிலில் இருந்த ரூ. 12,000 ரொக்கப் பணம், ரூ. 40,000 மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications