சிங்கப்பூர்: உரசிக் கொண்ட விமானங்கள்- இறக்கைகள் துண்டிப்பு
சிங்கப்பூர்:சிங்கப்பூர் விமான நிலையத்தில் இரு விமானங்கள் கிளம்புவதற்காக புறப்பட்டபோது உரசிக் கொண்டதில் இரு விமானங்களின் இறக்கைகளும் உடைந்தன.
சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரு போயிங் 777 ஜெட் விமானங்கள் கிளம்பின. ஒரு விமானம் ரோம் நகருக்கும், இன்னொரு விமானம் கோபன்ஹேகன் நகருக்கும் செல்ல வேண்டியவை.
விமானங்கள் ரன்வேயில் அருகருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக உரசிக் கொண்டன. இதில் இரு விமானங்களின் பக்கவாட்டு இறக்கைகளும் மோதிக் கொண்டு துண்டாயின.
இதையடுத்து உடனடியாக இரு விமானங்களும் நிறுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு விமானங்களிலும் இருந்த 420 பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் 3 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அவர்கள் கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications