கணவரின் கம்ப்யூட்டரின் பைத்தியம்!
சென்னை:எந்த நேரமும் கம்ப்யூட்டரே கதி என்று கணவர் இருந்ததால், மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி (25) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார் ரமேஷ். அவருக்கு வானிலை ஆராய்ச்சி குறித்து ஆர்வம் அதிகமாம். இதுதான் இன்டர்நெட் காலமாச்சே.
இதனால் சதாசர்வ நேரமும் இன்டர்நெட்டில் புகுந்து கால நிலை மாற்றம், வானிலை, தட்பவெப்பம் குறித்த பல தகவல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்.
இந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகி எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டுமாக இருக்க ஆரம்பித்துள்ளார். மனைவி, குழந்தைகள் இருப்பதையே மறந்து போனவராக மாறினார் ரமேஷ்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கணவரும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது, புவனேஸ்வரி, சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் விழித்தெழுந்த ரமேஷும், குழந்தைகளும் புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதனர். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். புவனேஸ்வரி சாவதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், மனக் குழப்பத்துடன் வாழ்ந்து வந்தேன். இந்த மனக் குழப்பத்துடன் என்னால் தொடர்ந்து வாழ முடியாது. பல கஷ்டங்களைப் பட்டு விட்டேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தைகளைப் பார்த்துக் ெகாள்ளவும் என்று எழுதி வைத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications