கரூர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கரூர்:கரூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவ, மாணவியர் பீதியடைந்து ஓடினர்.
கருர் காந்திகிராமில் லார்ட்ஸ் பார்க் மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் டூ வரை உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பள்ளியில் குண்டு வெடிக்கப் போவதாக மிரட்டினார்.
இதையடுத்து மாணவ, மாணவியர் மத்தியில் பீதி ஏற்பட்டது. வகுப்பறையிலிருந்து அவர்கள் வெளியேறி ஓடினர்.
தகவல் அறிந்ததும், மோப்ப நாய் சகிதம், போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில் அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
வெடிகுண்டு புரளியைக் கிளப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications