தந்தையை குண்டு வீசிக் கொன்ற மகன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை அருகே தந்தையை வெடிகுண்டு வீசி கொன்றார் மகன்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது மாவிலிப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்நதவர் மொக்கை என்கிற மொக்கைராஜ் தேவர்(56). இவரது மகன் சின்னனன் (28). உடல் ஊனமுற்றவர். வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

மொக்கைராஜுக்கு ஏராளமான நிலம், சொத்து, வீடுகள் உள்ளன. இவற்றைப் பங்கு பிரிப்பது தொடர்பாக சின்னனுக்கும், மொக்கைராஜுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபத்தில் தன்னிடம் இருந்த பாறையை உடைக்க பயன்படும்நாட்டு வெடிகுண்டை எடுத்து தனது தந்தை மீது வீசினார் சின்னன். அந்த குண்டு வெடித்து மொக்கைராஜ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். வெடிகுண்டு வீச்சால் அந்தப் பகுதியே அதிரந்தது.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மொக்கைராஜுவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மொக்கைராஜ் உயிரிழந்தார்.

தப்பிவிட்ட சின்னனை போலீஸார் தேடி கைது செய்தனர். அவரது வீட்டிருந்து 3 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சின்னானின் செயலுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது சின்னான் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் மொக்கைராஜ் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்துள்ளார்.

இந்த ஆத்திரத்தில்தான் தந்தையை குண்டு வீசி சின்னான் கொன்று விட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+