ரயில் பயணிகள் கைதுக்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் ரயில்கள் காலதாமதமாக வருவதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்திய அப்பாவி பயணிகளை கைது செய்து சிறையில் தள்ளிய ரயில்வேயின் செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை புறநகர் ரயில்களின் நேரங்களை மாற்றியமைத்தது பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ரயில்கள் காலதாமதமாகவே வருகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள், அதிருப்தி அடைந்து பல்லாவரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களைக் கைது செய்து ரயில்வே போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று கூட பாராமல் சிறையில் அடைத்துள்ளது கொடுமையானது, கண்டனத்துக்குரியது.

ரயில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு எச்சரிக்கை விடுத்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும்.

இந்த நிலை தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று எச்சரித்துள்ளார் வரதராஜன்.

எல்லா விஷயத்திலும் நியாயம் பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே???!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+